ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணியில் பங்குபற்றும் மக்களை நிதியமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி இன்று (30) கொழும்பில் எதிர்ப்பு பேரணியை முன்னெடுக்க ஆயத்தங்கள் செய்து வருகின்றது.