சுதந்திரத்தைப் பாதுகாப்பது நமது பொறுப்பு – எதிர்க்கட்சித் தலைவர்

171

சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு அனைத்து பிரஜைகளினதும் பொறுப்பு என்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் நிபந்தனையற்ற அர்ப்பணிப்பு ஆட்சியாளர்களின் பொறுப்பு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உச்ச சுதந்திரத்திற்காக தேசம் எதிர்கொண்ட அனைத்து சவால்களையும் முறியடிப்பதற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைவருக்கும் தேசத்தின் மரியாதையும் அஞ்சலியும் செலுத்தப்பட வேண்டும். இலங்கை சுதந்திரம் பெற்று 76 வருடங்கள் கடந்துள்ள போதிலும், பெற்ற சுதந்திரத்தை தேசிய, பொருளாதார, சமூக, கல்வி, சமய ரீதியில் அர்த்தமுள்ளதாக்க நாம் தவறிவிட்டோம்.

1948 இல் இருந்து, 76 வருடங்களாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு நாம் பெற்ற அரசியல் சுதந்திரத்தை பொருளாதார மற்றும் சமூக சுதந்திரமாக மாற்றும் பொறுப்பு எமக்கு உள்ளது. ஆனால், துரதிஷ்டவசமாக, குறுகிய வேறுபாடுகளாலும், இனவாத, மத உணர்வுகளாலும் அரசியல் களம் மாசுபடுவதால், நாம் நாடாகப் பிளவுபட்டு, பல துரதிர்ஷ்டவசமான அவலங்களை எதிர்கொண்டோம்.

அதன்படி, ஒரு நாடு என்ற வகையில் சாதனைகள், பின்னடைவுகள் மற்றும் தோல்விகள் கடந்த 76 ஆண்டுகளில் நமக்கு அனுபவத்தை வழங்குகின்றன. ‘சுதந்திரம் மற்றும் சுதந்திரம்’ என்பது வெறும் வெற்றியல்ல, அது தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here