follow the truth

follow the truth

August, 22, 2025
HomeTOP1சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து

Published on

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரில் இன்று (04) நண்பகல் வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலி முகத்துவாரம் வரையிலான வீதிகள் மற்றும் செராமிக் சந்தியிலிருந்து காலி முகத்திடல் வரையான வீதிகள் சுதந்திர வைபவம் முடியும் வரை மூடப்படும்.

இதேவேளை, இன்று காலை 5 மணி முதல் 9 மணி வரை கரையோர மார்க்கத்தில் இயங்கும் ரயில்கள் தலைமைச் செயலகம், கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி ஆகிய நிலையங்களில் நிறுத்தப்படாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுதந்திர தின கொண்டாட்டம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துணை பொது மேலாளர் என். ஜே. இந்திபொலகே தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...