சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரில் இன்று (04) நண்பகல் வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலி முகத்துவாரம் வரையிலான வீதிகள் மற்றும் செராமிக் சந்தியிலிருந்து காலி முகத்திடல் வரையான வீதிகள் சுதந்திர வைபவம் முடியும் வரை மூடப்படும்.
இதேவேளை, இன்று காலை 5 மணி முதல் 9 மணி வரை கரையோர மார்க்கத்தில் இயங்கும் ரயில்கள் தலைமைச் செயலகம், கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி ஆகிய நிலையங்களில் நிறுத்தப்படாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துணை பொது மேலாளர் என். ஜே. இந்திபொலகே தெரிவித்திருந்தார்.