கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் பதவியில் இருந்து சுகீஷ்வர இராஜினாமா

387

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் பதவியில் இருந்து சுகீஷ்வர பண்டார இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகீஷ்வர பண்டார முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக பல வருடங்கள் பணியாற்றினார்.

ராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அவரது தனிப்பட்ட செயலாளராக பணியாற்றியவர் சுகீஸ்வர பண்டார.

எனினும், தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக அவர் அந்த பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிமல் லன்சா மற்றும் குழுவினரால் உருவாக்கப்பட்ட புதிய கூட்டணியுடன் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here