“ஜனாதிபதி ரணில் வருவாராயின் பொஹொட்டுவ ஆதரிக்க வேண்டும்”

308

தற்போதைய ஜனாதிபதி வெற்றியடையாத போதிலும், அவர் குறிப்பிட்ட மட்டத்தில் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

எனவே, மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாக வருவதற்கு தாம் அவரிடம் எந்தத் தகுதியிழப்பையும் காணவில்லை எனவும், தேர்தலில் முன்னிற்கும் பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை அவருக்கு வழங்க வேண்டும் எனவும் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி வேட்பாளர் யார் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here