follow the truth

follow the truth

July, 31, 2025
HomeTOP1புதிய கட்சி ஊடாக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் சரத் பொன்சேகா?

புதிய கட்சி ஊடாக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் சரத் பொன்சேகா?

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் சரத் பொன்சேகாவின் தலைமையில் கட்சி சார்பற்ற மக்கள் சக்தி (Non-Party People’s Force) என்ற புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஜனவரி 03ஆம் திகதி உருவாக்கப்பட்டது.

நாட்டின் எதிர்காலத்திற்காக கட்சி பேதமின்றி தேசிய அபிவிருத்திக் கொள்கைகளின்படி செயற்பட வேண்டும் என்பதையும் இது காட்டுகிறது.

அண்மையில், முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் கட்சியில் இணைந்தமைக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

இதனால் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய சூழல் உருவானது.

தயா ரத்நாயக்கவை கட்சியில் இணைத்துக்கொண்டால், இப்போது கோட்டாபய ராஜபக்ஷவையும் கட்சியில் சேர்த்துக்கொள்ள முடியும் என சரத் பொன்சேகா பகிரங்கமாக ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீனவ சமூகத்திற்கான பாதுகாப்பு வலை – புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு...

யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...

ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை

எதிர்காலத்தில் ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டம் பின்பற்றப்படாவிட்டால், உரிமங்களை இரத்து செய்ய...