follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பிற்கு ஆதரவு வழங்காத எம்.பி.க்கள் இதோ

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பிற்கு ஆதரவு வழங்காத எம்.பி.க்கள் இதோ

Published on

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு இன்று (07) காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமானது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அங்கு 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில், நாட்டின் பொருளாதாரம் தற்போது விரைவான வளர்ச்சியை அடைந்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி சபையில் உரையாற்றும் போது, ​​ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழு சபையை விட்டு வெளியேறியதுடன், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை.

ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ராஜித சேனாரத்ன, சரத் பொன்சேகா, பாட்டளி சம்பிக்க ரணவக்க, இஷாக் ரஹ்மான் மற்றும் குமார வெல்கம ஆகியோர் ஜனாதிபதியின் உரையை கேட்டுக்கொண்டே கூட்டத்தில் இருந்தனர்.

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) நடைபெறவுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...