follow the truth

follow the truth

August, 2, 2025
Homeஉள்நாடுஉலக பீட்சா தினத்திற்காக நீர்கொழும்பில் இலங்கையின் மிகப்பெரிய பீட்சா தயாரிப்பு

உலக பீட்சா தினத்திற்காக நீர்கொழும்பில் இலங்கையின் மிகப்பெரிய பீட்சா தயாரிப்பு

Published on

பெப்ரவரி 09 ஆம் திகதி உலக பீட்சா தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பு ஏத்துகல பிரதேசத்தில் அமைந்துள்ள Tuk Tuk Wine and Dine Hotel இலங்கையின் மிகப் பெரிய பீட்சாவை நேற்று (08) இரவு ஹோட்டல் வளாகத்தில் உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

ஹோட்டலின் நிறைவேற்று சமையல்காரர் துமிந்த வணிகசேகர இதற்கான முயற்சியை எடுத்திருந்தார்.

50 அங்குல நீளமுள்ள இந்த பீட்சா 12 கிலோ எடை கொண்டது.

இந்த பீட்சாவை உருவாக்க, தக்காளி கலவை, மொஸரெல்லா சீஸ், கோழி இறைச்சி, சொசெஜஸ் 04 வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் சுவைகள் கொண்ட பெல் மிளகு, ஆலிவ் எண்ணெய் மற்றும் வெங்காயம் பயன்படுத்தப்பட்டது மற்றும் இந்த பீட்சா 08 நிமிடங்களில் சுடப்பட்டது.

இதை ருசிப்பதற்காக 100க்கும் மேற்பட்டோர் இந்த ஓட்டல் வளாகத்திற்கு வந்தனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு, இந்த ஹோட்டல் உலக பீட்சா தினத்தை முன்னிட்டு 40 அங்குல நீளமுள்ள பீட்சாவை தயார் செய்தது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...