உலக பீட்சா தினத்திற்காக நீர்கொழும்பில் இலங்கையின் மிகப்பெரிய பீட்சா தயாரிப்பு

254

பெப்ரவரி 09 ஆம் திகதி உலக பீட்சா தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பு ஏத்துகல பிரதேசத்தில் அமைந்துள்ள Tuk Tuk Wine and Dine Hotel இலங்கையின் மிகப் பெரிய பீட்சாவை நேற்று (08) இரவு ஹோட்டல் வளாகத்தில் உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

ஹோட்டலின் நிறைவேற்று சமையல்காரர் துமிந்த வணிகசேகர இதற்கான முயற்சியை எடுத்திருந்தார்.

50 அங்குல நீளமுள்ள இந்த பீட்சா 12 கிலோ எடை கொண்டது.

இந்த பீட்சாவை உருவாக்க, தக்காளி கலவை, மொஸரெல்லா சீஸ், கோழி இறைச்சி, சொசெஜஸ் 04 வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் சுவைகள் கொண்ட பெல் மிளகு, ஆலிவ் எண்ணெய் மற்றும் வெங்காயம் பயன்படுத்தப்பட்டது மற்றும் இந்த பீட்சா 08 நிமிடங்களில் சுடப்பட்டது.

இதை ருசிப்பதற்காக 100க்கும் மேற்பட்டோர் இந்த ஓட்டல் வளாகத்திற்கு வந்தனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு, இந்த ஹோட்டல் உலக பீட்சா தினத்தை முன்னிட்டு 40 அங்குல நீளமுள்ள பீட்சாவை தயார் செய்தது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here