follow the truth

follow the truth

August, 2, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாநீதி அமைச்சரின் வருகையை விரும்பாத கெஹெலிய

நீதி அமைச்சரின் வருகையை விரும்பாத கெஹெலிய

Published on

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையின் வார்ட் இலக்கம் மூன்றில் சிகிச்சை பெறுகிறார்.

இந்நாட்களில் அவரது நலம் விசாரிக்க எம்பிக்கள் அமைச்சர்கள் என்று பலரும் வந்து போகின்றனர்.

இந்நிலையில், “என்னுடைய ஸ்ட்ரெஸ் இப்போ ரொம்பவே கொரஞ்சிருச்சி… ஏனென்னா சிறைச்சாலைக்கு உள்ளே இருக்கும் போது நான் இப்போ போன் பாவிப்பதில்லையே.. இப்போ இரண்டு நேரம் தான் சாப்பிடுறன்..” முன்னாள் அமைச்சர் தெரிவித்திருக்கிறாராம்

இந்நிலையில் அண்மைய நாட்களாக பொஹட்டு அமைச்சர்கள் எம்பிக்கள் என கெஹெலியவை காண நிறையப்பேர் சென்றிருந்தனர்.

இந்நிலையில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் கெஹெலியவை பார்வையிட வரும் செய்தியை கேட்ட கெஹெலிய, அமைச்சரே நீங்கள் என்னை பார்க்க வரவேண்டாம். ஏனெனில் நீங்கள் நீதி அமைச்சர், அவ்வாறு இருக்க என்னைப் பார்க்க சிறைக்கு வருவது அவ்வளவு நல்லதல்ல என்று தெரிவித்துள்ளாராம்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...