follow the truth

follow the truth

August, 10, 2025
Homeஉள்நாடு"மில்கோவை வாங்குவது குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமுல் தயார்"

“மில்கோவை வாங்குவது குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமுல் தயார்”

Published on

மில்கோ நிறுவனம் மற்றும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபை (NLDB) இந்தியாவின் அமுல் நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்வதில் வெளிப்படைத்தன்மையை மீளப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாக நிறுவனம் தனது கேள்விக்கு பதிலளித்ததாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இதுபற்றி தானும் தனது குழுவினரும் கேட்டதாகவும், இங்கு வெளிப்படைத்தன்மை இல்லாததை சுட்டிக்காட்டியதாகவும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

“ஜனதா விமுக்தி பெரமுன மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய நாங்களும் குறிப்பாக அமுல் நிறுவனத்தை சந்தித்தோம். இலங்கையின் NLDB நிறுவனம் மற்றும் மில்கோவை அமுல் வாங்குவது தொடர்பில் கலந்துரையாடினோம்.

வெளிப்படைத் தன்மை இல்லாததையும் அதில் எங்களின் செல்வாக்கையும் அவர்களுக்கு விளக்கினோம். அதேபோன்று இங்கு எதுவுமே பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என்பதையும் ஜனாதிபதி தனது சொந்த சொத்தாக இதனை விற்பனை செய்வதில் தலையிட்டமைக்கு எமது எதிர்ப்பையும் நாம் காட்டினோம்.

மேலும் இது குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இங்குள்ள வெளிப்படைத்தன்மையை ஆராய்வோம் என்றும் கூறினார்கள்..”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...