follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1கெஹெலியவின் கைது அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஒரு பாடம்

கெஹெலியவின் கைது அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஒரு பாடம்

Published on

சந்தேகத்திற்கிடமான மனித இம்யூனோகுளோபுலின் மருந்து வியாபாரம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டதை அனைத்து அமைச்சரவை அமைச்சர்களுக்கும் ஒரு பாடம் என வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் வைத்தியர் சங்கத்தின் தலைவர் நிபுணர் வைத்தியர் சமல் சஞ்சீவ குறிப்பிடுகின்றார்.

அமைச்சரவை அமைச்சர் என்ற ரீதியில் தன்னிச்சையாக செயற்பட முடியாது என்பதையே இச்சம்பவம் காட்டுவதாகவும் அவர் மீதுள்ள நம்பிக்கையை காப்பாற்றி உண்மை தகவல்களை முன்வைத்து பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி மக்களுக்கு அதிகூடிய சேவையை வழங்குவதற்கு அமைச்சரவை முன்வர வேண்டும் எனவும் வைத்தியர் குறிப்பிடுகின்றார்.

இம்யூனோகுளோபுலின் தரப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ் தயாரிக்கப்படும் போது, ​​தடுப்பூசி குப்பிகளில் இரத்தத்தால் பரவும் நோய்களை அறிமுகப்படுத்துவதைத் தடுக்க மேம்பட்ட தொழில்நுட்ப உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் சரியான தொழிற்சாலை அல்லது பராமரிப்பு இல்லாமல், இரத்த பிளாஸ்மாவைச் சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த இம்யூனோகுளோபுலினை கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் பயன்படுத்தியுள்ளனர்.

டெண்டரில் குறிப்பிட்டுள்ளபடி அனைத்து இருபத்தி இரண்டாயிரத்து ஐந்நூறு தடுப்பூசி குப்பிகளையும் பயன்படுத்தியிருந்தால் எய்ட்ஸ், ஹெபடைடிஸ் போன்ற நோய்கள் இந்நாட்டில் பரவி மிகப் பெரிய படுகொலை நடந்திருக்கக் கூடும் எனவும் வைத்தியர் மேலும் தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...