பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவருமான ஷிரான் பாசிக்கின் காதலியை ஹெரோயினுடன் கைது செய்வதில் விசேட அதிரடிப் படையினர் வெற்றி பெற்றுள்ளனர்.
இது பதில் பொலிஸ் மா அதிபரின் யோசனையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நீதி விசேட நடவடிக்கையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையாகும்.
பொல்கஸ்ஓவிட்ட, ஹல்பிட்ட ஹர்மன் மைனர் மாவத்தையில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட விசேட அதிரடிப்படையினர் பொல்கசோவிட, 480 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த தெஹிவளையைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரைக் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த பெண் ஷிரான் பாசிக் இனது காதலி எனதகவல் வெளியாகியுள்ளதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவிக்கின்றனர்.
விசேட அதிரடிப்படையின் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் உத்தரவின் பேரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.