follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1இஸ்ரேலுடன் இலங்கை அரசு துணை நிற்கும்

இஸ்ரேலுடன் இலங்கை அரசு துணை நிற்கும்

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மிரி ரெகவி உட்பட அவர்களின் தூதுக்குழு இலங்கை வந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஹமாஸ் போராளிகள் வசமுள்ள இஸ்ரேலியர்களை மீட்டெடுக்கும் இஸ்ரேலின் திட்டங்களுடன் எப்பொழுதும் இலங்கை உறுதுணையாக இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆனால் காஸா பகுதியில் இடம்பெறும் சண்டைகள் உடன் நிறுத்தப்படல் வேண்டும் எனவும் ஜனதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் என்ற நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பலஸ்தீன் என்ற நாட்டை உருவாக்க இலங்கை எப்பொழுதும் துணை நிற்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் சர்வதேச விவகாரம் தொடர்பான ஆலோசகர் தின்னுத கொலம்பகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...