follow the truth

follow the truth

May, 17, 2025
HomeTOP135 நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள் இன்று இலங்கைக்கு

35 நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள் இன்று இலங்கைக்கு

Published on

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 35 நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் இன்று (17) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு கொழும்பில் நாளை முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் சீனா, மலேசியா, ஜப்பான், பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் பல நாடுகளின் அமைச்சர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நீண்ட தூர ரயில் சேவைகள் இன்று இயங்காது

இன்று (17) காலை, காலி, நீர்க்கொழும்பு மற்றும் வெயாங்கொட போன்ற குறுந்தூர ரயில் வீதிகளில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படும்...

இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து

இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் 24...

துறைமுகங்கள், விமான நிலையங்களில் இலத்திரணியல் நுழைவாயில் அமைப்புக்கள் விரைவாக மேற்கொள்ளப்படும்

ஜப்பான் நாட்டின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இலத்தரணியல் நுழைவாயில் அமைப்பை நிறுவும் திட்டத்தை விரைவாக மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் போக்குவரத்து,...