follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசமாதான நீதவான் நியமனம் தொடர்பிலான அறிவிப்பு

சமாதான நீதவான் நியமனம் தொடர்பிலான அறிவிப்பு

Published on

சமாதான நீதவான் நியமனத்தைப் பெறுவதற்கான கல்வித் தகைமையாக நிர்ணயிக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தியடைய வேண்டும் என்ற நிபந்தனை க.பொ.த சாதாரண தரமாக குறைக்கப்பட்டுள்ளது.

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷவினால் நவம்பர் 27ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில், சமாதான நீதவான் நியமனத்திற்கான கல்வித் தகைமை மூன்று உயர்தரப் பாடங்களாக இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

அந்த விதியை திருத்தியமைத்து, கடந்த 13ம் திகதி மற்றுமொரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்ட நீதித்துறை அமைச்சர், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் இரண்டு அமர்வுகளுக்கு மேல் இல்லாது ஆறு பாடங்களில் C தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.

அப்படியிருந்தும், ஒருவருக்கு அந்தத் தகுதி இல்லாவிட்டாலும், ஒரு புகழ்பெற்ற மதத் தலைவரோ அல்லது ஒரு சங்கத் தலைவரோ அவர் சமூகத்திற்குச் செய்யும் முன்மாதிரியான சேவையைக் கருத்தில் கொண்டு சமாதான நீதியரசராக நியமிக்கத் தகுதியானவர் என்று பரிந்துரைத்தால், நீதி அமைச்சர் பரிசீலித்து அந்த நபரை சமாதான நீதிபதியாக நியமிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...