follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1'அவர்கள் சொல்வதெற்கெல்லாம் நான் போகமாட்டேன்'

‘அவர்கள் சொல்வதெற்கெல்லாம் நான் போகமாட்டேன்’

Published on

தேசிய வைத்தியசாலையின் அலுவலகத்தில் தான் ஒரு போதும் தடுத்து வைக்கப்படவில்லை என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.

ஒரு சில ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காக வேலையை விட்டு விலகத் தயாராக இல்லை என்றும் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் தொடர்பில் வைத்தியர் ருக்ஷான் பெல்லன விடுத்துள்ள கருத்துக் காரணமாக ஊழியர்கள் மத்தியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதற்கிணங்க, அந்த அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஊழியர்கள் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவை சுமார் 06 மணிநேரம் அலுவலகத் தடுப்புக் காவலில் வைத்ததுடன், நேற்று தேசிய வைத்தியசாலையில் எதிர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

இங்கு, வைத்தியர் ருக்ஷான் பெல்லன தேசிய வைத்தியசாலைக்கு வருகை தந்தால், தொழில் ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக கனிஷ்ட ஊழியர்கள் மேலும் தெரிவித்திருந்தனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...