தேசிய வைத்தியசாலையின் அலுவலகத்தில் தான் ஒரு போதும் தடுத்து வைக்கப்படவில்லை என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.
ஒரு சில ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காக வேலையை விட்டு விலகத் தயாராக இல்லை என்றும் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் தொடர்பில் வைத்தியர் ருக்ஷான் பெல்லன விடுத்துள்ள கருத்துக் காரணமாக ஊழியர்கள் மத்தியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கிணங்க, அந்த அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஊழியர்கள் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவை சுமார் 06 மணிநேரம் அலுவலகத் தடுப்புக் காவலில் வைத்ததுடன், நேற்று தேசிய வைத்தியசாலையில் எதிர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
இங்கு, வைத்தியர் ருக்ஷான் பெல்லன தேசிய வைத்தியசாலைக்கு வருகை தந்தால், தொழில் ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக கனிஷ்ட ஊழியர்கள் மேலும் தெரிவித்திருந்தனர்.