follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1'அவர்கள் சொல்வதெற்கெல்லாம் நான் போகமாட்டேன்'

‘அவர்கள் சொல்வதெற்கெல்லாம் நான் போகமாட்டேன்’

Published on

தேசிய வைத்தியசாலையின் அலுவலகத்தில் தான் ஒரு போதும் தடுத்து வைக்கப்படவில்லை என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.

ஒரு சில ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காக வேலையை விட்டு விலகத் தயாராக இல்லை என்றும் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் தொடர்பில் வைத்தியர் ருக்ஷான் பெல்லன விடுத்துள்ள கருத்துக் காரணமாக ஊழியர்கள் மத்தியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதற்கிணங்க, அந்த அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஊழியர்கள் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவை சுமார் 06 மணிநேரம் அலுவலகத் தடுப்புக் காவலில் வைத்ததுடன், நேற்று தேசிய வைத்தியசாலையில் எதிர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

இங்கு, வைத்தியர் ருக்ஷான் பெல்லன தேசிய வைத்தியசாலைக்கு வருகை தந்தால், தொழில் ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக கனிஷ்ட ஊழியர்கள் மேலும் தெரிவித்திருந்தனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...