follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1'அவர்கள் சொல்வதெற்கெல்லாம் நான் போகமாட்டேன்'

‘அவர்கள் சொல்வதெற்கெல்லாம் நான் போகமாட்டேன்’

Published on

தேசிய வைத்தியசாலையின் அலுவலகத்தில் தான் ஒரு போதும் தடுத்து வைக்கப்படவில்லை என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.

ஒரு சில ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காக வேலையை விட்டு விலகத் தயாராக இல்லை என்றும் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் தொடர்பில் வைத்தியர் ருக்ஷான் பெல்லன விடுத்துள்ள கருத்துக் காரணமாக ஊழியர்கள் மத்தியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதற்கிணங்க, அந்த அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஊழியர்கள் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவை சுமார் 06 மணிநேரம் அலுவலகத் தடுப்புக் காவலில் வைத்ததுடன், நேற்று தேசிய வைத்தியசாலையில் எதிர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

இங்கு, வைத்தியர் ருக்ஷான் பெல்லன தேசிய வைத்தியசாலைக்கு வருகை தந்தால், தொழில் ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக கனிஷ்ட ஊழியர்கள் மேலும் தெரிவித்திருந்தனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...