follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1DAT கொடுப்பனவு பற்றிய தீர்மானமிக்க கலந்துரையாடல்

DAT கொடுப்பனவு பற்றிய தீர்மானமிக்க கலந்துரையாடல்

Published on

DAT கொடுப்பனவு தொடர்பில் சுகாதார நிபுணர் சங்கங்களுக்கும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவிற்கும் இடையில் நாளை (19) முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலும் தோல்வியடையும் பட்சத்தில் நாளை (19) பிற்பகல் கூடி வேலைநிறுத்தம் தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக சுகாதார வல்லுநர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களில், 72 சுகாதார தொழிற்சங்கங்கள் கடந்த சில வாரங்களில் இரண்டு தடவைகள் பல நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, தமக்கும் அதிகரிக்கப்பட்டுள்ள DAT கொடுப்பனவான முப்பத்தைந்தாயிரம் ரூபாவை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன எழுத்து மூலம் இணக்கம் தெரிவித்ததையடுத்து கடந்த 15ஆம் திகதி காலை வேலை நிறுத்தம் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதன்படி நாளை முற்பகல் 11.00 மணியளவில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...