‘ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயற்சித்தால் ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல நேரிடும்’

333

ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயற்சித்தால் ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல நேரிடும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்த பழைய காலாவதியான அரசியல் அமைப்பு மாற்றப்பட வேண்டும் என்றும் அதனை மாற்றும் முதன்மையான பொறுப்பு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

குருநாகலில் நேற்று (18) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அழிவில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்ப பெண்கள் முன்வர வேண்டுமெனவும், அவர்களுக்கு தலைமைத்துவத்தை வழங்க தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here