follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1இன்னும் சில மாதங்களில் மக்களுக்கு நிவாரணம்

இன்னும் சில மாதங்களில் மக்களுக்கு நிவாரணம்

Published on

நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் மலையக திராவிட மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த மாதத்தில் முன்வைக்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் ‘இந்தியா-இலங்கை’ வீட்டுத்திட்டத்தின் நான்காம் கட்டத்தை ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

பாரத் லங்கா வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் 10 மாவட்டங்களில் உள்ள 45 தோட்டங்களில் நிர்மாணிக்கப்படவுள்ள 1300 வீடுகளுக்கான அடிக்கல்லைக் குறிக்கும் ஸ்தாபனத்தை இணையத்தளத்தின் ஊடாகத் திரைநீக்கம் செய்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீர் வழங்கல் அமைச்சர் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களினால் செய்யப்பட்டது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...