follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஜனாதிபதி வேட்பாளர் சவாலை ஏற்க தயார்

ஜனாதிபதி வேட்பாளர் சவாலை ஏற்க தயார்

Published on

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டால், சவாலை ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாட்டிற்காக ஒன்றிணைந்த நடவடிக்கையின் அடிப்படையில் பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதே நம்பிக்கை எனவும், பொதுவான உடன்படிக்கைகள் மூலம் அரசியல் கூட்டணியை பேணுவதே நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் கீழ் ஜனாதிபதித் தேர்தலும், வேட்பாளர் தெரிவும் இடம்பெறும் எனத் தெரிவித்த பாட்டளி சம்பிக்க ரணவக்க, நாட்டின் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்று கூட்டாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் சவாலை ஏற்கத் தயார் எனவும் தெரிவித்தார்.

பொறுப்பு என்ன என்பது தமக்கு பொருந்தாது எனத் தெரிவித்த சம்பிக்க ரணவக்க, இம்முறையும் பொது நோக்கத்திற்காகவே தனது பங்களிப்பு என்றும் தெரிவித்தார்.

எந்தவொரு பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளருக்கும் தனது ஆதரவு இருக்கும் என்றும், அதற்கு தகுதியாக நான் முன்மொழியப்பட்டால், சவாலை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் பாட்டளி சம்பிக்க ரணவக்க மேலும் குறிப்பிட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...