முன்னதாக பொருத்தப்பட்ட மின் சமிக்ஞைகளுக்கு தாம் பொறுப்பல்ல என அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (20) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதிகரித்து வரும் ரயில் விபத்துக்கள் குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“முன்பு நிறுவப்பட்ட மின் சமிக்ஞை அமைப்புகளுக்கும் எனக்கு எந்தக் கடமையும் பொறுப்பும் இல்லை. ஏனெனில் அவை நீண்டகாலமாக நிறுவப்பட்ட சமிக்ஞை அமைப்புகள். இப்போது அதிக ரயில் விபத்துக்கள் ஏற்படுவதற்கும் எனக்கும் எந்தத் சம்பந்தமும் இல்லை”