follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுஇலங்கைக்கு 50 சீன சொகுசு பயணிகள் கப்பல்கள்

இலங்கைக்கு 50 சீன சொகுசு பயணிகள் கப்பல்கள்

Published on

சீன சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் 50 சொகுசு பயணிகள் கப்பல்கள் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றில் பெரும்பாலான கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும், மேலும் சில கப்பல்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களில் நங்கூரமிடவுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சரிபோ டீன் தெரிவித்ததாக சண்டே ஒப்சர்வர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

இங்கு வரும் இந்த ஒரு சொகுசு பயணிகள் கப்பலில் சுமார் 1000 பயணிகள் இருப்பதாக கூறப்படுகிறது, மேலும் ஒரு கப்பல் இரண்டு நாட்களுக்கு இந்த நாட்டின் துறைமுகங்களில் நங்கூரமிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, இந்த சொகுசு பயணிகள் கப்பல் நடவடிக்கைகளின் மூலம் இந்நாட்டின் சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடையும் என நம்பப்படுகிறது.

இவ்வருடம் பெப்ரவரி 16ஆம் திகதி வரை இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 350,000ஐத் தாண்டியுள்ளது.

இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் ஜனவரி மாதத்தில் 208,253 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டில் இலங்கைக்கு ஏறக்குறைய 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன் இந்த ஆண்டு அது 25 இலட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...