follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1"சனத் நிஷாந்தவின் மரணத்தின் உண்மையை விரைவில் கண்டறியவும்"

“சனத் நிஷாந்தவின் மரணத்தின் உண்மையை விரைவில் கண்டறியவும்”

Published on

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் திட்டமிட்ட கொலையா? சாதாரண விபத்தினால் இந்த மரணம் இடம்பெற்றதா என்பதை விரைவாக ஆராய்ந்து குற்றவாளிகள் இருப்பின் அவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்கப்பட வேண்டுமென குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அந்த சந்தேகத்தின் காரணமாகவே அவரது மனைவி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்வதாகத் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களிலும் இது தொடர்பில் விவாதம் இடம்பெற்று வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடு விரைவாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும் அவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருந்தால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் போதே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்...