follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1"மத்திய வங்கியை சுயாதீனமாக்கியது நாடாளுமன்றம்.."

“மத்திய வங்கியை சுயாதீனமாக்கியது நாடாளுமன்றம்..”

Published on

இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு காரணமாக இந்த நாட்களில் நாட்டின் அரசியல் சூடுபிடித்துள்ளது. நேற்றுமுன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் பலமானவர்கள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து இது தொடர்பாகப் பேசியுள்ளது.

இந்த சம்பள அதிகரிப்பு குறித்து நாட்டு மக்கள் என்ன பேசுகிறார்கள் என ஜனாதிபதியிடம் கூறியபோது, ​​இறுதியாக, “சர், இது ஜனாதிபதி தேர்தலை கூட பாதிக்கும் விடயம்” என்றார்கள்.

“அங்கே நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. மத்திய வங்கி ஒரு சுயாதீன நிறுவனம். அவர்களின் சம்பளத்தை அவர்களே தீர்மானிக்கிறார்கள். மத்திய வங்கி ஒரு சுயாதீன நிறுவனமாக பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. அதனால் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை..” அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, “தேர்தலை எவ்வாறு பாதிக்கும் என்பதன் அடிப்படையில் மாத்திரமல்ல, எதிர்கால சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு சட்டத்தை திருத்துவது பாராளுமன்றத்தின் பொறுப்பாகும்” எனத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பானது மக்களின் எரியும் கோபத்தின் மீது பெற்றோலை வீசுவது போன்றது என அரசியல் அரங்கில் இன்றைய நாட்களில் பல இடங்களில் பேசப்பட்டு வருகின்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...