இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு காரணமாக இந்த நாட்களில் நாட்டின் அரசியல் சூடுபிடித்துள்ளது. நேற்றுமுன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் பலமானவர்கள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து இது தொடர்பாகப் பேசியுள்ளது.
இந்த சம்பள அதிகரிப்பு குறித்து நாட்டு மக்கள் என்ன பேசுகிறார்கள் என ஜனாதிபதியிடம் கூறியபோது, இறுதியாக, “சர், இது ஜனாதிபதி தேர்தலை கூட பாதிக்கும் விடயம்” என்றார்கள்.
“அங்கே நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. மத்திய வங்கி ஒரு சுயாதீன நிறுவனம். அவர்களின் சம்பளத்தை அவர்களே தீர்மானிக்கிறார்கள். மத்திய வங்கி ஒரு சுயாதீன நிறுவனமாக பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. அதனால் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை..” அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, “தேர்தலை எவ்வாறு பாதிக்கும் என்பதன் அடிப்படையில் மாத்திரமல்ல, எதிர்கால சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு சட்டத்தை திருத்துவது பாராளுமன்றத்தின் பொறுப்பாகும்” எனத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பானது மக்களின் எரியும் கோபத்தின் மீது பெற்றோலை வீசுவது போன்றது என அரசியல் அரங்கில் இன்றைய நாட்களில் பல இடங்களில் பேசப்பட்டு வருகின்றது.