பரிஸில் விவசாய கண்காட்சியின் போது ஆர்ப்பாட்டம்

197

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நடைபெறும் வருடாந்திர விவசாய கண்காட்சியை விவசாயிகள் குழு ஒன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அங்கும் சூடான சூழல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

விவசாயிகளை கண்காட்சிக்குள் நுழைய விடாமல் தடுக்க பிரான்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.

இரு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விவசாயிகளின் வருமானக் குறைப்பு, பருவநிலை மாற்றம், விவசாயத் துறையில் முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஆதரவு அளிக்கக் கோரி, பிரான்சில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் பதவி விலக வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பாரிஸ் விவசாய கண்காட்சி பிரான்சில் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

09 நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் 06 இலட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here