follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுமருந்து குடிக்க வற்புறுத்திய தந்தையை கோடரியால் தாக்கிய மகன்

மருந்து குடிக்க வற்புறுத்திய தந்தையை கோடரியால் தாக்கிய மகன்

Published on

மனநலம் குன்றிய தனது மகனுக்கு மருந்து குடிக்க வற்புறுத்திய தந்தை ஒருவரை நோயுற்ற மகன் கோடரியால் வெட்டி படுகொலை செய்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிடிகல, களுஆராச்சிகொட பகுதியைச் சேர்ந்த பியதாச ஜயசிங்க என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் 47 வயதுடைய மகனை பிடிகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவரின் மகன் அங்கொட மனநல வைத்தியசாலையில் நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் நீதிமன்ற அனுமதியின் பேரில் குறித்த நபரை பெற்றோரிடம் ஒப்படைத்த வைத்தியர்கள் அவருக்கு தினந்தோறும் மருந்து வழங்குமாறு பரிந்துரைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் (24) இரவு, மகனுக்கு தேவையான மருந்தை கொடுக்க தந்தை முயன்றபோது, ​​மகன் அதை எடுக்க மறுத்து, வீட்டில் பதுங்கி உள்ளார்.

அதன்படி தந்தை நாற்காலியில் அமர்ந்திருந்த போது மகன் கோடரியால் தலையில் தாக்கியதுடன் சந்தேக நபரை பிடிகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நபர் இன்னும் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...