follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2"ரஷ்யா - உக்ரைன் போரில், ரஷ்யா தோற்றே ஆக வேண்டும்"

“ரஷ்யா – உக்ரைன் போரில், ரஷ்யா தோற்றே ஆக வேண்டும்”

Published on

கடந்த 2022 பெப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போர், 2 வருடங்களைக் கடந்து தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நிதியுதவி உக்ரைனுக்கு தொடர்ந்து கிடைப்பதில் பல்வேறு காரணங்களால் சிக்கல் நிலவுகிறது.

உக்ரைனிடம் போதுமான அளவு இராணுவ தளவாடங்கள் இல்லாததால், தங்கள் நாட்டில் ரஷ்யா இராணுவம் முன்னேறி , பிராந்தியங்களை கைப்பற்றுவதை தடுப்பது கடினமாக உள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உலக நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறார்.

மேற்கத்திய நாடுகளின் இராணுவ உதவிகள் கிடைப்பது தாமதமாவதால், உயிரிழப்புடன் உக்ரைனின் பல பிராந்தியங்களை ரஷியாவிடம் இழக்க நேரிடும் என உக்ரைன் ஒராணுவ அமைச்சர் கடந்த வாரம் தெரிவித்தார்.

இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவான நாடுகளின் சந்திப்பு, பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடைபெற்றது.

இதில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவல் மேக்ரான் தெரிவித்ததாவது;

“.. இப்போரில் ரஷ்யா வெற்றி பெறக் கூடாது. ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புடன் நிலையாக இருக்க ரஷ்யா இப்போரில் தோற்க வேண்டியது அவசியம்.

ரஷ்யா வெற்றி பெறாமலிருக்க நாங்கள் அனைத்தையும் செய்வோம்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன்தான் நாங்கள் போரிடுகிறோமே தவிர ரஷ்யா மக்களுடன் அல்ல.

குறுகிய தூர மற்றும் தொலைதூர ஏவுகணைகளும், வெடிகுண்டுகளும் உக்ரைனுக்கு விரைவில் வழங்கப்படும்.

உக்ரைனுக்கு நட்பு நாடுகளின் இராணுவத்தை அனுப்ப வேண்டிய சூழல் வந்தால் அதையும் பரிசீலனை செய்வோம்…”

சில தினங்களுக்கு முன், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின், “நேரடியாக மேற்கத்திய நாடுகளின் இராணுவம் உக்ரைன் மண்ணில் இருந்து போரிட தொடங்கினால் அது ரஷ்யாவிற்கும் நேட்டோ (NATO) கூட்டணி நாடுகளுக்கும் எதிரான போராக மாறும் “என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

ராகம வைத்தியசாலையின் நுழைவாயிலுக்கு அருகில் 200,000 ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் ராகம பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்ச...

நாளை முதல் வடக்கு ரயில் சேவைகளில் மாற்றம்

கடந்த சில வாரங்களாக கொழும்பு கோட்டையில் இருந்து இயக்கப்பட்டு வரும் கடுகதி ரயில் சேவையை, கல்கிஸ்ஸை ரயில் நிலையத்திலிருந்து...

ஆகஸ்ட் 1 முதல் புதிய வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வரும் – ட்ரம்ப்

ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் திகதியில் இருந்து...