follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுநாவுலவில் மணல் ஈ : கவனமாக இருக்க அறிவுரை

நாவுலவில் மணல் ஈ : கவனமாக இருக்க அறிவுரை

Published on

நாவுல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல கிராம சேவை களங்களில் மணல் ஈ கடியால் லீஷ்மேனியாசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவுல பொது சுகாதார பரிசோதகர் தெரிவிக்கின்றார்.

மாத்தளை மற்றும் தம்புள்ளை ஆரம்ப வைத்தியசாலைகளில் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை ஆராய்ந்த போது இந்த தகவல் தெரியவந்துள்ளது.

நாவுல – நாலந்த, உடுதெனிய, நாவுல நகரப் பகுதி மற்றும் செனகம கிராமத்தைச் சேர்ந்த மக்கள் லீஷ்மேனியாசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பில் நாவுல பொதுச் சுகாதார பரிசோதகர் வைத்தியர் விஜித ஏகநாயக்க, இது தொடர்பில் விசாரனையில் தெரிவிக்கையில், தோலில் வலியற்ற காயங்களை கணக்கில் கொள்ளாமை போன்ற காரணங்களினால் பல நோயாளர்களுக்கு இந்த நோயினால் அதிக காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பொதுமக்கள் தமது வீட்டைச் சுற்றியுள்ள சூழலை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலமும், சுகயீன நிலையைக் கண்டால் உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்வதன் மூலமும், சுற்றுப்புறச் சூழல் தொடர்பில் அவதானமாக இருப்பதன் மூலமும் இந்த நோயிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் வைத்தியர் விஜித ஏக்கநாயக்க தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....