follow the truth

follow the truth

June, 3, 2025
HomeTOP1"மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்"

“மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்”

Published on

தனக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்ற ஜனநாயகத்தின் பிரகாரம் எந்தவொரு உறுப்பினருக்கும் இவ்வாறான பிரேரணையை முன்வைக்க உரிமை உண்டு எனவும் அந்த உரிமையை தாம் மதிப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

பிரேரணைக்கு முகங்கொடுக்கவுள்ளதாக தெரிவித்த மஹிந்த யாப்பா அபேவர்தன, நம்பிக்கையில்லா பிரேரணையை மிக விரைவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

“என்ன நடக்குதுன்னு பார்ப்போம்” என்றார் சபாநாயகர்.

வீதி பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட போது சபாநாயகர் அரசியலமைப்பை மீறியதாக குற்றம் சுமத்தி ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புறா தீவு கடல் பரப்பை சுத்தம் செய்யும் பணி திருகோணமலையில் ஆரம்பம்

திருகோணமலை புறா தீவுப் பகுதியில் இன்று (02) கடல் பரப்பை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. கடல்வாழ் உயிரினங்களுக்கு...

எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளது – கோப் குழுவில் புலப்பட்டது

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும்...

Starlink இணைய சேவையை அறிமுகப்படுத்த தேவையான அனைத்து நடைமுறைகளும் பூர்த்தி

இணையச் சேவை வழங்குநரான Starlink அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. Starlink...