“மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்”

218

தனக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்ற ஜனநாயகத்தின் பிரகாரம் எந்தவொரு உறுப்பினருக்கும் இவ்வாறான பிரேரணையை முன்வைக்க உரிமை உண்டு எனவும் அந்த உரிமையை தாம் மதிப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

பிரேரணைக்கு முகங்கொடுக்கவுள்ளதாக தெரிவித்த மஹிந்த யாப்பா அபேவர்தன, நம்பிக்கையில்லா பிரேரணையை மிக விரைவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

“என்ன நடக்குதுன்னு பார்ப்போம்” என்றார் சபாநாயகர்.

வீதி பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட போது சபாநாயகர் அரசியலமைப்பை மீறியதாக குற்றம் சுமத்தி ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here