follow the truth

follow the truth

June, 21, 2025
HomeTOP1"மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்"

“மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்”

Published on

தனக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்ற ஜனநாயகத்தின் பிரகாரம் எந்தவொரு உறுப்பினருக்கும் இவ்வாறான பிரேரணையை முன்வைக்க உரிமை உண்டு எனவும் அந்த உரிமையை தாம் மதிப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

பிரேரணைக்கு முகங்கொடுக்கவுள்ளதாக தெரிவித்த மஹிந்த யாப்பா அபேவர்தன, நம்பிக்கையில்லா பிரேரணையை மிக விரைவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

“என்ன நடக்குதுன்னு பார்ப்போம்” என்றார் சபாநாயகர்.

வீதி பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட போது சபாநாயகர் அரசியலமைப்பை மீறியதாக குற்றம் சுமத்தி ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வருகிறார் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk), அடுத்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ...

காட்டு யானைப் பிரச்சினையைத் தீர்க்க பொறுப்புள்ள அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் நியமிக்கப்படும்

கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை...

தரமற்ற சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு 400,000 ரூபாய் அபராதம்

தரநிலைகளுக்கு இணங்காத சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 400,000 ரூபாய் அபராதம் விதித்து நீர்கொழும்பு...