தேயிலைக்கு பயன்படுத்தப்படும் உரம் சந்தை விலையை விட இரண்டாயிரம் ரூபாய் குறைவாகவே விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்குச் சொந்தமான கொமர்ஷல் உரக் கம்பனி மற்றும் சிலோன் உர நிறுவனம் உற்பத்தி செய்யும் அனைத்து தேயிலை உரங்களும் இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தேயிலைக்கு பயன்படுத்தப்படும் உரங்களின் விலையை குறைக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.