follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுகால்நடைகளுக்குள் பரவி வரும் கொடிய தொற்றுநோய்

கால்நடைகளுக்குள் பரவி வரும் கொடிய தொற்றுநோய்

Published on

கிளிநொச்சி, தர்மபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கால்நடைகளுக்கு பரவி வரும் பசு வைரஸ் நோய் காரணமாக நேற்று (03) வரை பல மாடுகள் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

கிளிநொச்சி கண்டாவளை கால்நடை வைத்திய அதிகாரி எஸ். நிரஞ்சன் கூறுகையில், நோய் அறிகுறி குறைந்துள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறதாகவும், குறித்த தொற்றுநோய் ஆரம்பத்தில் இருக்கும் போது பசுக்கள் உணவு உண்பதை நிறுத்துவதாகவும், இருந்த இடத்தை விட்டும் வெளியேறத் தயங்குவதாகவும் அப்படியே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாடுகளின் உடல் முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட்டு கடுமையான காய்ச்சல் ஏற்படும் என்றும் வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், நோய் தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் தென்படும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அத்தகைய கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு நோயை குணப்படுத்த முடியாது என தர்மபுரத்தில் உள்ள கால்நடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கடந்த வருடம் இப்பிரதேசங்களில் கால்நடைகளை தாக்கிய இந்த தொற்று நோய் காரணமாக 400க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...