உலகப் பணக்காரர்கள், சூப்பர் ஸ்டார்கள் கலந்து கொண்ட ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான அம்பானியின் மகனின் திருமணத்தினை உலகமே பேசுகின்றது.
ஃபேஸ்புக் உரிமையாளர் உட்பட உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் அழைக்கப்பட்ட இந்த அரச குடும்பத்துக்கான அழைப்பிதழ் பட்டியலில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தனவும் இருந்தார்.
எனவே இது குறித்து மஹேல தனது முகநூலில் குறிப்பொன்றை சேர்த்துள்ளார்.
“ஆனந்த் மற்றும் ராதிகாவுக்கு வாழ்த்துக்கள்! கொண்டாட்டங்களின் அற்புதமான வார இறுதி. எனது ஆடைகளை வடிவமைத்து தந்த @olivecouture இற்கு நன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.