follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇலங்கையில் 12 நீலக் கொடி கடற்கரைகள் அடையாளம்

இலங்கையில் 12 நீலக் கொடி கடற்கரைகள் அடையாளம்

Published on

“நீலக்கொடி கடற்கரை” யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கையில் தற்போது 12 முக்கிய கடற்கரைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடல் சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நான்கு கடற்கரைகளை செயல்பாட்டு நிலைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் மேற்பார்வைக் குழு “நீலக் கொடி கடற்கரை” என்ற கருத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டபோது இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாராளுமன்ற அறிக்கையின்படி, அண்மையில் (பெப்ரவரி 20) பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் துறைசார் மேற்பார்வைக் குழு ஒன்று கூடியது, இதன் போது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நாட்டின் கரையோரங்களைத் தயாரிப்பதை நோக்கமாகக் கொண்ட “நீலக் கொடி கடற்கரை” என்ற கருத்துருவில் கலந்துரையாடல் நடைபெற்றது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, சுற்றுலா மற்றும் காணி அமைச்சு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம், கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் குழு கூட்டத்தில் கலந்துகொண்டனர். எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாசவும் இதில் கலந்துகொண்டார்.

“நீலக் கொடி கடற்கரை” தரச் சான்றிதழைப் பெற்ற கடற்கரைகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஈர்க்கப்படுவதாக குழுத் தலைவர் சுட்டிக்காட்டினார். இந்த கடற்கரைகள் பாதுகாப்பானதாகவும், தரத்தில் உயர்ந்ததாகவும் இருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. எவ்வாறாயினும், “நீலக்கொடி கடற்கரை” சான்றிதழைப் பெறுவதற்கு இலங்கையில் உள்ள கடற்கரைகளின் தரம் அபிவிருத்தி இன்மை தொடர்பில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரின் கவனமும் செலுத்தப்பட வேண்டுமெனவும் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, கடற்கரையோரங்களில் இடம்பெறும் அனுமதியற்ற கட்டட நிர்மாணமங்களை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...