follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ரிஷாத்தின் தீர்ப்புக்கு எதிராக அலி சப்ரி ரஹீம் வெற்றி

ரிஷாத்தின் தீர்ப்புக்கு எதிராக அலி சப்ரி ரஹீம் வெற்றி

Published on

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு பிரதம மாவட்ட நீதிபதி சந்துன் விதானவினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மே மாதம் 23ஆம் திகதி துபாயில் இருந்து இலங்கை திரும்பிய போது, சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தங்கத்துடன் அலி ஷப்ரி ரஹீம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீடமானது ஒழுக்காற்று நடவடிக்கை என்ற பெயரில் அவரை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும் கட்சி உயர்பீடமானது தன்னிச்சையாக முடிவெடுக்காது சுயாதீன குழுவொன்றினை நிறுவியே இது குறித்து தீர்மானிக்க வேண்டும் எனவும் இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து தனது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யவும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தம்மை நீக்குவதை தடுக்கவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை பரிசீலித்த கொழும்பு பிரதம மாவட்ட நீதிபதி, மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...