காலி வீதியில் இருந்து வெள்ளவத்தை புகையிரத நிலைய வீதிக்கு செல்லும் பகுதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக வெள்ளவத்தை பகுதியிலிருந்து செல்லும் வீதி ஒரு வழிப்பாதைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கடற்கரை வீதியை பயன்படுத்தி பஸ்கள் கொழும்பு நோக்கி பயணிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.