follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்சோமாலிய கடற்கொள்ளையர்கள் பங்களாதேஷ் கப்பல் கடத்தல்

சோமாலிய கடற்கொள்ளையர்கள் பங்களாதேஷ் கப்பல் கடத்தல்

Published on

பங்களாதேஷுக்குச் சொந்தமான சரக்குக் கப்பலையும் அதன் பணியாளர்களையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மொசாம்பிக் தலைநகர் மபுடோ துறைமுகத்தில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி பயணித்த ‘எம்.வி. அப்துல்லா’ என்ற கப்பல் நேற்று காலை கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 55,000 தொன் நிலக்கரி ஏற்றப்பட்ட கப்பலை கடத்திய பின்னர், 23 பேர் கொண்ட அதன் பணியாளர்கள் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இந்தியப் பெருங்கடலில் இருந்து 600 கடல் மைல் தொலைவில் உள்ள சோமாலியாவின் தலைநகரான மொகடிஷூவின் கிழக்கே கடற்பரப்பில் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட குழுவினர் அனைவரும் பங்களாதேஷ் பிரஜைகள் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...