இலங்கை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒரேயொரு ஆண் வரிக்குதிரை நேற்று இரவு உயிரிழந்துள்ளது.
இது தொடர்பில் உத்தியோகபூர்வ விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் இன்று தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆண் வரிக்குதிரை 06 வருடங்களுக்கு முன்னர் சீனாவிலிருந்து விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இந்த நாட்டிற்கு பெறப்பட்டது.