தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேராசிரியை சாவித்திரி குணசேகரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட தேஷ்பந்து தென்னகோனின் நியமனம் அரசியலமைப்புச் சபையால் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.