follow the truth

follow the truth

August, 1, 2025
Homeவிளையாட்டுகிரிக்கட் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 28 வருடங்கள்

கிரிக்கட் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 28 வருடங்கள்

Published on

இலங்கை கிரிக்கெட் அணி 1996 ஆம் ஆண்டு கிரிக்கட் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் (17) 28 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

பாகிஸ்தானின் லாஹூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றன.

அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய, ரொமேஷ் களுவிதாரண, அசங்க குருசிங்க, ரொஷான் மஹாநாம, ஹஷான் திலகரத்ன குமார தர்மசேன, முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்த வாஸ் ஆகியோரைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை அணிக்கு அர்ஜுன ரணதுங்க தலைமை தாங்கினார்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க, தனது வெற்றியில் அதிக நம்பிக்கையுடன் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

இலங்கையின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா சார்பில் மார்க் டெய்லர் 74 ரன்களும், ரிக்கி பாண்டிங் 45 ரன்களும் எடுத்தனர்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அர்ஜுன ரணதுங்கா தலைமையிலான இலங்கை அணி ஏழு விக்கெட்டுகளால் வெற்றிபெற்று வரலாற்றுப் புத்தகத்தில் புதிய பக்கத்தை சேர்த்துள்ளது.

போட்டியை நடத்தும் நாடு உலகக் கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர்...