follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்தென் ஐஸ்லாந்தில் அவசர நிலை

தென் ஐஸ்லாந்தில் அவசர நிலை

Published on

ஐஸ்லாந்தின் Reykjanes தீபகற்பத்தில் உள்ள எரிமலை மீண்டும் வெடித்துள்ளது.

கடந்த 4 மாதங்களில் எரிமலை வெடிப்பது இது நான்காவது முறையாகும்.

இதன் காரணமாக தென் ஐஸ்லாந்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

கடந்த டிசம்பரில் இருந்து எரிமலை மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது, மேலும் அது எரிமலைக்குழம்புகளை வெளியேற்றுவதால், ஆபத்து மண்டலங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வழிநடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எரிமலையின் மேற்கு மற்றும் தெற்கில் இரண்டு இடங்களில் இருந்து எரிமலை வெடிப்பதாக ஐஸ்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

Grindavik நகரின் கிழக்குப் பாதுகாப்புச் சுவர் வரை எரிமலைக்குழம்பு பாய்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த எரிமலையை விரைவில் செயலிழக்கச் செய்யாவிட்டால், எரிமலைக் குழம்பு கடல் வரை பாயும் அபாயம் இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...