follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுசிங்கராஜா வனத்தில் 2 யானைகளில் ஒன்றை காணவில்லை

சிங்கராஜா வனத்தில் 2 யானைகளில் ஒன்றை காணவில்லை

Published on

சிங்கராஜ வனாந்தரத்தில் காணப்பட்ட இரண்டு யானைகளில் ஒன்றை காணவில்லை என சிங்கராஜ வனாந்தரத்தின் பாதுகாப்பு அதிகாரி சரத் விஜேதுங்க இன்று (20) தெரிவித்தார்.

அத்துடன் இவ்விடயம் குறித்து இரத்தினபுரி மாவட்ட யானைகள் பாதுகாப்பு அமைப்பு நீர்வீழ்ச்சி சுற்றாடல் அமைப்பு ஆகியன தமது அவதானத்தை செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளன.

சிங்கராஜா வனாந்தரத்தின் இரத்தினபுரி எல்லையிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் தென் மாகாண காலி நெலுவ வரையுள்ள பரந்த பிரதேசத்தில் உலாவி வந்த இந்த இரண்டு யானைகளை அடையாளம் காண்பதற்காக ஒரு யானையின் கழுத்தில் கருப்பு நிற கழுத்துப்பட்டி அணிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த இரண்டு யானைகளும் சிங்கராஜ எல்லையை தாண்டி இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை மாணிக்கவத்த மற்றும் கலவான பொதுபிட்டிய வன பிரதேசங்களில் உலாவி பல உயிர்களை பலி எடுத்தவைகளாகும்.

எனவே இந்த இரண்டு யானைகள் காணாமல் போதல் குறித்து அவதானத்துடன் விழிப்புடன் இருப்பதாக சிங்கராஜ வனாந்தர பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...