follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1தற்போது வேகமாகப் பரவி வரும் 'டீனியா' - சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை

தற்போது வேகமாகப் பரவி வரும் ‘டீனியா’ – சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை

Published on

நாட்டில் தற்போது டினியா ( Tinea) எனும் சரும நோய் வேகமாக பரவி வருவதாக தோல் நோய் தொடர்பான விசேட வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நோயின் பிரதான அறிகுறி அரிப்பு ஏற்படுவதுடன், சிவப்பு புள்ளிகள் தோன்றுதல் போன்ற அறிகுறி காணப்படும்.

அதிகளவில் தோல் சுருங்கும் இடங்களிலும் வியர்வை அதிகளவில் சேரும் இடங்களிலும் அதிகளவில் இது ஏற்படும். அக்குள், பாதங்கள் மற்றும் தலையிலும் இத்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

சருமத்தை தூய்மையாக வைத்திருத்தல், மற்றவர்களின் ஆடைகளை பயன்படுத்தாமல் இருத்தல், தளர்ந்த ஆடைகளை பயன்படுத்தல் போன்றவற்றின் மூலம் இந்த சரும நோய் ஏற்படுவதை தடுக்க முடியும் என விசேட வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நோயை சிகிச்சைகள் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும் என்பதுடன், நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...