follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசர்வதேச மிளகு உச்சி மாநாடு இலங்கையில்

சர்வதேச மிளகு உச்சி மாநாடு இலங்கையில்

Published on

சர்வதேச மிளகு சமூகம் வருடாந்தம் நடத்தும் சர்வதேச மாநாட்டை 2024ஆம் ஆண்டு இலங்கையில் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

1972 ஆம் ஆண்டில், உலகின் முக்கிய மிளகு உற்பத்தி செய்யும் நாடுகள் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் கீழ் சர்வதேச மிளகு சமூகத்தை நிறுவியது.

இந்த அமைப்பின் முக்கிய மற்றும் நிரந்தர உறுப்பு நாடுகள் இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா மற்றும் வியட்நாம்.

உறுப்பு நாடுகளுக்கு இடையே மிளகு உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஆராய்ச்சி முடிவுகளை பரிமாற்றம், பாரம்பரிய மற்றும் புதிய சந்தைகளுக்கான திட்டங்களை தயாரித்தல் மற்றும் ஊக்குவித்தல், சர்வதேச வர்த்தகத்தில் சுங்க வரி மற்றும் வரி அல்லாத தடைகளை தளர்த்துவதற்கான ஒத்துழைப்பை ஏற்படுத்துதல். மிளகு சமூகத்தின் 52 ஆவது சர்வதேச மாநாட்டை இந்த ஆண்டு இலங்கையில் நடத்துவதற்கு விவசாயம் மற்றும் பெருந்தோட்ட அமைச்சரினால் முன்மொழியப்பட்டிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...