follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுநீர்கொழும்பில் 137 பெண்கள் கைது

நீர்கொழும்பில் 137 பெண்கள் கைது

Published on

நீர்கொழும்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த 53 மசாஜ் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளில் அவற்றில் பணிபுரிந்த 137 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் 15 வயதுடைய சிறுமி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தலதுவ இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

கைதான பெண்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டடுள்ளனர்.

அதன்போது அவர்களில் இருவர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ்ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்...