follow the truth

follow the truth

July, 27, 2024
Homeவிளையாட்டுகால்பந்தாட்டத்தின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

கால்பந்தாட்டத்தின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

Published on

கால்பந்தாட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியினருக்கும் இடையில் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

11 வருடங்களின் பின்னர் கொழும்பு ரேஸ்கோர்ஸில் நடைபெற்ற நான்கு மூலை உதைபந்தாட்டப் போட்டியில் பூட்டானுக்கு எதிரான போட்டியில் இலங்கை உதைபந்தாட்ட அணி அபார வெற்றியைப் பெற்றுள்ளதுடன் வெற்றியைப் பாராட்டிய ஜனாதிபதி உதைபந்தாட்ட அணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள தெற்காசிய சம்பியன்ஷிப் கால்பந்தாட்டப் போட்டியில் (SAF) வெற்றி பெறுவதற்கும் ஜனாதிபதி உதைபந்தாட்ட அணியை ஊக்குவித்தார்.

வீரர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஆண்டி மொரிசனும் கலந்து கொண்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

இந்திய T20 தொடரிலிருந்து விலகிய மற்றுமொரு வீரர்

இந்தியாவுடனான T20 கிரிக்கெட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ விலகியதையடுத்து வரவிருக்கும் போட்டிகளில் அவருக்கு பதிலாக...

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது. இந்திய – பங்களாதேஷ் மகளிர் அணிகள்...

2024 ஒலிம்பிக் திருவிழா நாளை ஆரம்பம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா நாளை (26) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. 32 விளையாட்டுப் போட்டிகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ள...