இலங்கை முஸ்லிம் சமூக ஆளுமைகளுள் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவர் மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹிம் (கபூரி) அவர்கள் இன்று இறையடி சேர்ந்தார்.
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முதன்மை அமீர்களுள் ஒருவர், இலங்கை முஸ்லிம் சமூகத்தை அறிவு சார்ந்து நகர்த்துவதில், இலங்கை முஸ்லிம் சமூகத்தில் சிந்தனா ரீதியான புரட்சியை ஏற்படுத்துவதில் மிக முக்கியமான ஆளுமை.
விருட்சங்களாக வளர்ந்து நிற்கின்ற பல்வேறு இஸ்லாமிய நிறுவனங்களின் ஸ்தாபகர். அல்குர்ஆனின் முதல் சிங்கள மொழிபெயர்ப்பின் முன்னோடி, முஸ்லிம் சமூகத்தின் ஆய்வாராச்சித் துரையின் முன்னோடி, பெண்களுக்கான முன்மாதிரி மிகுந்த மார்க்கக்கல்வி நிலையங்களின் ஸ்தாபகர். வல்ல அல்லாஹ், இந்த ஆத்மாவை பொருந்திக்கொள்வானாக.
மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹிம் (கபூரி) அவர்களை உயர்ந்த சுவனபதிகளில் வாழச் செய்வானாக..!